Pages

Wednesday, March 14, 2012

கூகுள் சேமித்து வைத்திருக்கும் உங்களது தகவல்களை நீக்குவதற்கு



கூகுள் நிறுவனம் கடந்த 1ம் திகதி முதல் புதிய Privacy Policy ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் கூகுள் சாதனங்கள் அனைத்திலும் பகிர்ந்து கொள்ளப்படும்.
அதாவது உங்களுக்கு ஒரு ஜிமெயில் கணக்கு இருந்தால், அதில் நீங்கள் புதியதொரு கணக்கினை உருவாக்கும் போது தரப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் ஜிப்ளஸ், ஆர்குட், குரோம் பிரவுசர், யு-ட்யூப் என கூகுள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்தப்படும்.

கூகுள் நாம் மேற்கொள்ளும் இணையத்தளங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் குறித்து வைத்துப் பயன்படுத்தும். உங்கள் தேடல்கள் மற்றும் பார்க்கும் தளங்கள் ஆகிய அனைத்தும் அதன் தகவல் தளத்தில் பதிவாகும். தேவைப்படும் நேரத்தில் இவை பயன்படுத்தப்படும்.
கூகுள் இது போல நம் இணைய வேலைகளைப் பின்பற்றாமல் இருக்க வேண்டும் எனில், அதற்கான எதிர் வேலைகளையும் நாம் மேற்கொள்ளலாம். இதனை ஒரு பட்டன் அழுத்தி மேற்கொள்ளலாம் என்பது இன்னும் ஆர்வமூட்டும் ஒரு தகவலாகும். இதனை எப்படி மேற்கொள்வது எனப் பார்க்கலாம்.
உங்கள் கூகுள் கணக்கில், பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்து நுழைந்த பின்னர், https://www.google.com/history என உங்கள் உலாவியின் முகவரி விண்டோவில் டைப் செய்திடவும் அல்லது கூகுள் சாதனங்களான கூகுள் ப்ளஸ் அல்லது கூகுள் தேடல் தளத்தில் மேலாக வலது மூலையில் உள்ள கீழ்விரி மெனுவில் Account Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.

இந்த அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்தில், Services என்ற இடத்திற்குச் செல்லவும். அடுத்து Go to web history என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.

இதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் நீங்கள் அண்மையில் சென்ற தளங்களின் முகவரிகள் மேற்கொண்ட தேடல்கள் அனைத்தும் அங்கு பட்டியலாக இருப்பதனைக் காணலாம்.

இங்கு உள்ள Remove all Web History என்ற கிரே கலர் பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து ஓகே பட்டன்களைக் கிளிக் செய்து வெளியேறவும். இதனைத் தொடர்ந்து, உங்களின் இணைய தேடல் பக்கங்கள், தகவல் தேடல் கேள்விகள் அனைத்தும் கூகுளின் கரங்களுக்குள் சிக்காது.

ரச்சா மூவி போஸ்டர்ஸ்



 

பிரபாகரன் மற்றும் குடும்பத்தினர் குறித்த மர்மங்கள் விலகுமா?


பிரபாகரன் மற்றும் குடும்பத்தினர் குறித்த மர்மங்கள் விலகுமா?  
2009- மே மாதம் முள்ளி வாய்க்காலில் தமிழருக்கு எதிராக நடந்த படு குரூரமான இனப்படுகொலைகளுக்குப் பிறகு எழுந்த முக்கிய கேள்வி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அவரது குடும்பத்தினர் இருக்கிறார்களா… அவரது மரணம் குறித்த இத்தனை மர்மங்கள் ஏன்? இருக்கிறார் என்று பலரும் கூறுகிறார்களே… அப்படியானால் மூன்றாண்டுகள் கடந்தும் ஏன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை? அட ஒரு அறிக்கை அல்லது புகைப்படமாவது தரலாமே… 4-வது ஈழப் போர் உண்டா?
இப்படி பல கேள்விகள். எதற்கும் நேரடி பதில் இல்லை. எதிர்முகாமில் தமிழரென்ற போர்வையில், குடித்து விலைமாதர்களுடன் கும்மாளமிட்டுக் கொண்டிருக்கும் ஈனப் பிறவிகள் சொல்லும் எதுவும் நம்பத் தகுந்ததாயில்லை.
கடைசி வரை பிரபாகரனுடனிருப்பது போல் நடித்து எல்லாம் முடிந்ததும் எதிரணிக்குப் போன சிலரின் வாக்கு மூலங்களிலும் உண்மை இல்லை.
எனில் அவரைப் பற்றிய உண்மை என்ன? யார் சொல்ல முடியும்? ஆதாரங்கள் எங்கே? இப்படி மனதை அறுத்த கேள்விகள் பல.  இவற்றுக்கு நாளை ஒளிபரப்பாகவிருக்கும் சேனல் 4 வீடியோ பதில் சொல்லுமா.. அல்லது புதிய சர்ச்சைகளுக்கு அடிகோலுமா? தெரியவில்லை.
பல நாட்டு ராணுவ உதவி, போனஸாக அவர்கள் போட்டுக் கொடுத்த சதித்திட்டங்களுடன் ஈழப் போருக்கு முடிவு கட்டியது சிங்கள ராணுவம்.
விடுதலைப் புலிகளை ன் நிழலைக் கூட நெருங்க முடியாத நிலையில், பல ஆண்டுகளாக சொல்லி சொல்லி தோற்றுக் கொண்டிருந்த இலங்கை ராணுவம், லட்சம் வரையிலான  அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிக்க சகல பலமும் தந்தவை இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இஸ்ரேல் போன்ற நாடுகளே!
சிங்களரின் இனவெறி கொடூரம் பக்கத்திலிருந்த தமிழ்நாட்டு மக்களை மட்டுமே எட்டியிருந்த நிலையில், அது  குறித்த வீடியோ ஆதாரங்களை உலகளாவிய ஒளிபரப்பாகச் செய்தது சேனல் 4. மறைக்கப்பட்ட உண்மைகளை அம்பலத்துக்குக் கொண்டுவந்தது. இந்தக் காட்சிகளைப் பார்த்து உலகம் அதிர்ந்தது.
அதுவரை இத்தனை ஆயிரம் பேரைக் கொன்றதாகச் சொல்கிறார்களே… இது மிகையாகத் தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பி வந்த உலக நாடுகள், உயிருடன் ஏதோ காக்கைகளைப் போல சுட்டுக் கொல்லப்படும் தமிழரைப் பார்த்து பேரதிர்ச்சி கொண்டனர்.
நாடுகள் தங்களுக்கிடையிலான அரசியலில் சிக்குண்டு இந்த விஷயம் குறித்து மவுனித்து நின்றாலும், மனிதாபிமானத்தை முன்னெடுத்துச் செல்லும் அமைப்புகள் பல நாடுகளின் இறுக்க வாயை திறக்க வைத்தன!
இலங்கையின் போர்க்குற்றம் என்ற வார்த்தை உலகளாவி நிற்கக் காரணம் இந்த வீடியோவும்தான்.
இந்த நிலையில் தற்போது இன்னொரு வீடியோ படத்தை சேனல் 4 உருவாக்கியுள்ளது. லண்டன் நேரப்படி புதன்கிழமை இரவு 10.55 மணியளவில் இந்த வீடியோ உலகம் முழுவதும் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த வீடியோவில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை, மனித இனமே வெட்கித் தலைகுனியுமளவுக்கு கொடூரமாக சிங்கள இனவெறி வீரர்கள் கொன்ற காட்சி அடங்கியுள்ளது. கூடவே தலைவர் பிரபாகரன் குறித்த பரபரப்புக் காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாக இந்த ஆவணப்படத்தைத் தயாரித்த காலம் மெக்காரே தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணப் படத்தை இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு பார்க்கலாம்.
ஐ. நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா, பிரான்ஸ், நார்வே ஆகிய நாடுகள் கொண்டு வந்துள்ளன. இந்தப் பின்னணியில் நாளை வெளியாகவுள்ள வீடியோ காட்சிகள்  இலங்கை மீதான அழுத்தத்தை பல மடங்கு அதிகரிக்கும், ஈழத் தமிழர் விடிவுக்கான முக்கிய ஆயுதமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிரபாகரன் தொடர்பான வீடியோவை இப்போது ஒளிபரப்புவது ஏன்?
இன்னொரு பக்கம், சிங்கள இனவெறி ஒரு இனத்தையே எப்படியெல்லாம் சின்னாபின்னமாக்கிவிட்டது என்பதைக் காட்டும் ஒரு வீடியோவில், இன்னமும் இருக்கிறார் என பெரும்பான்மைத் தமிழர்கள் நம்பும் பிரபாகரன் வீடியோ எதற்கு? அதன் உள்நோக்கம் என்ன என்ற கேள்வியை ஈழத் தமிழர் இணையங்கள், அமைப்புகள் எழுப்பியுள்ளன.
சேனல் 4 தனது நடுநிலைத் தன்மையைக் காட்ட, பிரபாகரன் வீடியோவைக் காட்டுகிறது என்றும், அவரது இருப்பு குறித்து காலம் மட்டுமே பதில் கூற வேண்டும் என்றும் இவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரபாகரன் தொடர்பான வீடியோ என ஏற்கெனவே இணையதளங்களில் ஏராளமான பதிவுகள் கிடக்கின்றன. இவை சிங்கள ராணுவம் மற்றும் இலங்கை அரசால் பரப்பப்பட்டவை. அவர்கள் பார்வையிலான பதிவுகளே அவை. அதில் ஏராளமான முரண்கள், சந்தேகங்கள். எனவேதான் இவற்றைப் பார்த்த பிறகும், பிரபாகரன் குறித்த நம்பிக்கையோடு உள்ளனர் உலகெங்கும் உள்ள தமிழர்கள்.
ஒருவேளை சேனல் 4 வீடியோவில் பிரபாகரன் குறித்த இதே காட்சிகளைப் பார்த்த பிறகு, அவற்றை ஏற்றுக் கொள்வார்களா தமிழர்கள்? மர்மங்கள் நீங்கப் பெறுமா? இலங்கையும் இந்தியாவும் கூட இன்னும் உறுதிப்படுத்த திணறும் ஒரு விஷயத்தை, எதன் அடிப்படையில் சேனல் 4 உறுதிப்படுத்த முனைகிறது என்ற கேள்விதான் இப்போது தமிழ்ச் சமூகத்தின் முன் நிற்கிறது!

நூலகத்தை மாத்தணும், புதிய தலைமைச் செயலகத்தை இடிக்கணும்… இங்கே என்னதான் நடக்குது?


அண்ணா நூலகத்தை மாத்தணும், புதிய தலைமைச் செயலகத்தை இடிக்கணும்…  என்னதான் நடக்கிறது இங்கே? – உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முறையாக பராமரித்து வருவதாகவும், அங்கு எந்த வசதியும் குறைக்கப்படவில்லை என்றும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திமுக ஆட்சியில் சென்னை கோட்டூர்புரத்தில் ரூ.172 கோடி செலவில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. இதனை நுங்கமபாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்திற்கு இடமாற்றம் செய்ய தமிழக அரசு தீர்மானித்தது. கடந்த 2.11.2011 அன்று அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்.பிரபாகரன், பி. புகழேந்தி, ஓய்வு பெற்ற ஆசிரியை எஸ்.டி. மனோன்மணி, மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி உட்பட பலர் பொதுநல மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். அப்போது மறு உத்தரவு வரும் வரை நூலகத்தை இடமாற்றம் செய்ய இடைக்கால தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் நூலகத்தில் உள்ள வசதிகளை அரசு திரும்பப்பெற்றால் அதனை நீதிமன்றம் கருத்தில் கொண்டு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று தெரிவித்திருந்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், நூலகத்தை இடமாற்றம் செய்வதற்காக அரசு எடுத்தது கொள்கை முடிவு ஆகும். அதனை நீதித்துறை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்திருந்தது.
இதனிடையே மனுதாரர்களில் ஒருவரான இளையபாரதி சார்பாக கூடுதல் மனு ஒன்றை மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தாக்கல் செய்தார். அதில் நூலகத்தில் உள்ள வசதிகளை அரசு குறைத்துவிட்டது. சந்தா செலுத்தி பத்திரிகைகளை வாங்குவது குறைந்துவி்ட்டது. எனவே, ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் குழு ஒன்றை அமைத்து அங்கு ஏற்படுத்தப்பட்ட வசதிகளின் குறைவு குறித்து விசாரித்து அறிக்கை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இம்மனு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான பிளீடர் வெங்கடேஷ் நூலகத்தின் சில போட்டோக்களையும், பதில் மனுவையும் தாக்கல் செய்தார். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார்.
அப்போது அரசு பிளீடர் வெங்கடேஷ் கூறுகையில், “மனுதாரரின் குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை. நூலகத்தில் எந்த குறையும் அவர் நேரடியாக பார்த்ததாக குறிப்பிடவில்லை. இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் உள்நோக்கம் உள்ளது. எந்த பத்திரிக்கை நிறுத்தப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கவில்லை. மனுவில் கூறியுள்ள அனைத்தும் பொதுவான குற்றச்சாட்டுகள் ஆகும்.
நூலகத்தை டி.பி.ஐ.க்கு மாற்றினால் தான் அந்த சுற்றுப்புறத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு பயன் ஏற்படும். தற்போது நூலகம் உள்ள இடத்தின் சுற்றுப்புறத்தில் 8 கல்வி நிறுவனங்கள் தான் உள்ளன. எனவே அதன் பயன் அங்கு குறைவாக உள்ளது. கன்னிமாரா நூலகத்தையும் பெரிதாக கட்ட அரசு முடிவு செய்துள்ளது,” என்றார்.
அதற்கு பதிலளித்த பி.வில்சன், “இவ்வழக்கில் எந்த உள்நோக்கமும் இல்லை. குற்றச்சாட்டுகளை மனுவில் தெளிவாக கூறியுள்ளோம். அது தொடர்பான போட்டோக்களையும் சமர்பித்துள்ளோம். நாங்கள் அங்கு சென்று பார்த்த போது ஏ.சி. எந்திரம் வேலை செய்யவில்லை. அங்கு வருகிறவர்கள் வியர்வையில் நனைந்தபடி புத்தகம் படிக்கின்றனர். உள்ளே எலி ஓடுகின்றது. எனவே கமிட்டி அமைத்து அங்குள்ள வசதி குறைவுகள் குறித்து விசாரிக்க வேண்டும்,” என்றார்.
அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது:
“நூலகம் அங்கு இருக்க வேண்டும் என்பதுதான் மக்கள் விருப்பமாக உள்ளது. ராணிமேரி கல்லூரியையும், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டிடம் ஒன்றையும் இடிப்பதற்கு முன்பு முயற்சி நடைபெற்றது. தற்போது நூலகம் மற்றும் புதிய தலைமைச் செயலகத்தையும் இடித்து மாற்ற முனைகின்றீர்கள். என்னதான் நடக்கிறது?” என்றார்.
அப்போது மூத்த வழக்கறிஞர் காந்தி கூறுகையி்ல், “மற்ற இடத்தில் வேண்டுமானாலும் நூலகத்தை அரசு அமைக்கட்டும். ஆனால் அண்ணா நூலகத்தை அரசு மாற்றக் கூடாது. அதன் வடிவையும் மாற்றக் கூடாது,” என்றார்.
அதற்கு பதிலளித்த அரசு பிளீடர், “நூலகத்தை அரசு முறையாக பராமரித்து வருகின்றது. எந்த வசதிகளும் குறையாமல் தொடர்ந்து அதனை அரசு பராமரிக்கும்”, என்றார்.
அரசு உத்தரவாதம் அளித்ததை அடுத்து மனுதாரர் தனது மனுவை திரும்பப் பெற்றார். நூலகத்தை சரியாக பராமரிக்கவில்லை என்றால் மனுதாரர் மீண்டும் மனு தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். நூலகம் தொடர்பான முக்கிய வழக்கை ஏப்ரல் 17ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
இளையபாரதி மனுவுக்கு பதிலளித்து, பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் சபிதா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
அரசியல் சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்ட பிறகு இது போன்ற மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நூலகத்தை பராமரிக்காமல் அதை அப்படியே விடுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தவறு.
அங்குள்ள அனைத்து வசதிகளையும் மேம்படுத்தியுள்ளோம். கழிவறைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். மின்தடை இருக்கும் நிலையில் கூட தானாக இயங்கும் ஜெனரேட்டர் வைக்கப்பட்டு மின் வசதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள புத்தகங்கள், பத்திரிக்கைகள் எதுவும் குறைக்கப்படவில்லை. அனைத்து ஊழியர்களும் அங்கு தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tuesday, March 13, 2012

ஒரு ரூபாய் அரிசிக்கு 400 ரூபாய் எரிவாயுவா?


 
விறகடுப்பை பயன்படுத்திய முந்தைய சமூகத்தை நோக்கியே மீண்டும் நாம் படையெடுக்க ஆரம்பிக்கும் காலம் வந்து விட்டதுஇந்த நியாயவிலைக்கடையில் பொருட்களை வாங்குவதற்குத் தான் எத்தனை மாற்றங்களை கொண்டு வந்தது நமது அரசுநல்ல மாற்றங்கள் என்று நம்மை ஆதரவு அளிக்க வைத்து நியாயவிலைக்கடைகளின் நியாயமாக கோரிக்கைகள் என அவர்களை நியாயப்படுத்திக் காட்டிக் கொண்டனர்.
ஆரம்பம் முதலே மாதவருமானத்தின் அடிப்படையில் மனிதர்களை தரம் பிரிக்க ஆரம்பித்தர்மாதவருமானம் 5000-க்கு அதிகாமானோருக்கு ஒரு அட்டை எனவும் 5000-க்கு குறைவானவர்களுக்கு ஒரு அட்டை எனவும் தரம் பிரித்தனர்பின்னர் அந்த அட்டையின் அடிப்படையில் மேல்தட்ட மக்களான 5000வருமானம் வாங்குபவர்களுக்கு பாதி சலுகைகளை கொடுக்க மறுத்தனர்காரணம் கேட்டால் கீழ்தட்டு மக்களுக்கு அதிகமாக வழங்கி அவர்களை மேம்படுத்துவதற்காகவே இத்திட்டம் என்றார்கள்.
அதோடு மட்டுமாஅதிக அளவு சீனி வாங்கினால் அவர்களுக்கு அரிசி கிடையாது இது என்ன புதிய சட்டமோஅடுக்கடுக்கான அவலங்களின் பாதையில் தொடர்ந்து..., வாயு சிலிண்டர்கள் வைத்து இருந்தால் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவு மண்ணெண்ணெய் என்று புதிய சட்டம் பிறப்பிக்க ஆரம்பித்தனர் மீண்டும் விடாத கருப்பாய் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது இந்த ஊழல்.
சென்ற ஆட்சியிலாவது வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எரிவாயுவான மண்ணெண்ணெய் வினியோகம் செய்யப்பட்டது.வருடத்திற்கு 52கோடி லிட்டர் கண்டிப்பாக விநியோகம் செய்யப்பட்டு வந்ததுஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கினாலும் 400 ரூபாய்க்கு எரிவாயுவின் விலையை கூட்டியதோடு நிறுத்திக் கொண்டதுஆனால் இந்த ஆட்சியில் வாயு சிலிண்டர்களின் விலை முந்தைய ஆட்சியைவிட கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் மண்ணென்ணெய்யையும் வருடத்திற்கு 48 கோடி லிட்டர் மட்டுமே விநியோகம் செய்து வருகின்றனர்
மீதமுள்ள கோடி லிட்டர் மண்ணெண்ணெய்யை எங்கே கொண்டு செல்கிறார்களோ தெரியவில்லைஇப்படியே போனால் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் எல்லாம் முற்றிலும் அழிந்து விடும் தருணம் மிக தொலைவில் இல்லை.