Pages

Tuesday, March 6, 2012

டிஜிபி லத்திக்கா சரணை கூடுதல் குற்றவாளியாக சேர்க்கக் கோரி புகார்


கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருக்கும் பாண்டியன், வினோதன் மற்றும் கணேசன் ஆகியோர் மீது, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தமிழக வீட்டு வசதி வாரிய நிலத்தை முறைகேடாக பெற்று மோசடியில் ஈடுபட்டதாக வழக்க பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே செல்வராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது, மூன்று பாதுகாப்பு அதிகாரிகளையும் காப்பாற்றும் வகையில், விசாரணை நடைபெற்று விட்டது, அவர்கள் மூவரும் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்று ஒரு கடிதத்தை லத்திக்கா சரண் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.  அந்த கடிதத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
தற்போது, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், தவறான தகவலை நீதிமன்றத்துக்கு அளித்து, மூன்று பாதுகாப்பு அதிகாரிகளையும் காப்பபாற்றி, குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்ததற்காக, லத்திக்கா சரணை இந்த வழக்கில் கூடுதல் குற்றவாளிகளாக சேர்க்கக் கோரி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஏற்கனவே வழக்கு தொடுத்த செல்வராஜ் என்பவர் மனு அளித்துள்ளார்.


நன்றி ..சவுக்கு

No comments:

Post a Comment