Pages

Wednesday, March 14, 2012

கூகுள் சேமித்து வைத்திருக்கும் உங்களது தகவல்களை நீக்குவதற்கு



கூகுள் நிறுவனம் கடந்த 1ம் திகதி முதல் புதிய Privacy Policy ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் கூகுள் சாதனங்கள் அனைத்திலும் பகிர்ந்து கொள்ளப்படும்.
அதாவது உங்களுக்கு ஒரு ஜிமெயில் கணக்கு இருந்தால், அதில் நீங்கள் புதியதொரு கணக்கினை உருவாக்கும் போது தரப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள் பயன்படுத்தும் ஜிப்ளஸ், ஆர்குட், குரோம் பிரவுசர், யு-ட்யூப் என கூகுள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்தப்படும்.

கூகுள் நாம் மேற்கொள்ளும் இணையத்தளங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் குறித்து வைத்துப் பயன்படுத்தும். உங்கள் தேடல்கள் மற்றும் பார்க்கும் தளங்கள் ஆகிய அனைத்தும் அதன் தகவல் தளத்தில் பதிவாகும். தேவைப்படும் நேரத்தில் இவை பயன்படுத்தப்படும்.
கூகுள் இது போல நம் இணைய வேலைகளைப் பின்பற்றாமல் இருக்க வேண்டும் எனில், அதற்கான எதிர் வேலைகளையும் நாம் மேற்கொள்ளலாம். இதனை ஒரு பட்டன் அழுத்தி மேற்கொள்ளலாம் என்பது இன்னும் ஆர்வமூட்டும் ஒரு தகவலாகும். இதனை எப்படி மேற்கொள்வது எனப் பார்க்கலாம்.
உங்கள் கூகுள் கணக்கில், பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்து நுழைந்த பின்னர், https://www.google.com/history என உங்கள் உலாவியின் முகவரி விண்டோவில் டைப் செய்திடவும் அல்லது கூகுள் சாதனங்களான கூகுள் ப்ளஸ் அல்லது கூகுள் தேடல் தளத்தில் மேலாக வலது மூலையில் உள்ள கீழ்விரி மெனுவில் Account Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.

இந்த அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்தில், Services என்ற இடத்திற்குச் செல்லவும். அடுத்து Go to web history என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.

இதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் நீங்கள் அண்மையில் சென்ற தளங்களின் முகவரிகள் மேற்கொண்ட தேடல்கள் அனைத்தும் அங்கு பட்டியலாக இருப்பதனைக் காணலாம்.

இங்கு உள்ள Remove all Web History என்ற கிரே கலர் பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து ஓகே பட்டன்களைக் கிளிக் செய்து வெளியேறவும். இதனைத் தொடர்ந்து, உங்களின் இணைய தேடல் பக்கங்கள், தகவல் தேடல் கேள்விகள் அனைத்தும் கூகுளின் கரங்களுக்குள் சிக்காது.

ரச்சா மூவி போஸ்டர்ஸ்



 

பிரபாகரன் மற்றும் குடும்பத்தினர் குறித்த மர்மங்கள் விலகுமா?


பிரபாகரன் மற்றும் குடும்பத்தினர் குறித்த மர்மங்கள் விலகுமா?  
2009- மே மாதம் முள்ளி வாய்க்காலில் தமிழருக்கு எதிராக நடந்த படு குரூரமான இனப்படுகொலைகளுக்குப் பிறகு எழுந்த முக்கிய கேள்வி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அவரது குடும்பத்தினர் இருக்கிறார்களா… அவரது மரணம் குறித்த இத்தனை மர்மங்கள் ஏன்? இருக்கிறார் என்று பலரும் கூறுகிறார்களே… அப்படியானால் மூன்றாண்டுகள் கடந்தும் ஏன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை? அட ஒரு அறிக்கை அல்லது புகைப்படமாவது தரலாமே… 4-வது ஈழப் போர் உண்டா?
இப்படி பல கேள்விகள். எதற்கும் நேரடி பதில் இல்லை. எதிர்முகாமில் தமிழரென்ற போர்வையில், குடித்து விலைமாதர்களுடன் கும்மாளமிட்டுக் கொண்டிருக்கும் ஈனப் பிறவிகள் சொல்லும் எதுவும் நம்பத் தகுந்ததாயில்லை.
கடைசி வரை பிரபாகரனுடனிருப்பது போல் நடித்து எல்லாம் முடிந்ததும் எதிரணிக்குப் போன சிலரின் வாக்கு மூலங்களிலும் உண்மை இல்லை.
எனில் அவரைப் பற்றிய உண்மை என்ன? யார் சொல்ல முடியும்? ஆதாரங்கள் எங்கே? இப்படி மனதை அறுத்த கேள்விகள் பல.  இவற்றுக்கு நாளை ஒளிபரப்பாகவிருக்கும் சேனல் 4 வீடியோ பதில் சொல்லுமா.. அல்லது புதிய சர்ச்சைகளுக்கு அடிகோலுமா? தெரியவில்லை.
பல நாட்டு ராணுவ உதவி, போனஸாக அவர்கள் போட்டுக் கொடுத்த சதித்திட்டங்களுடன் ஈழப் போருக்கு முடிவு கட்டியது சிங்கள ராணுவம்.
விடுதலைப் புலிகளை ன் நிழலைக் கூட நெருங்க முடியாத நிலையில், பல ஆண்டுகளாக சொல்லி சொல்லி தோற்றுக் கொண்டிருந்த இலங்கை ராணுவம், லட்சம் வரையிலான  அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிக்க சகல பலமும் தந்தவை இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இஸ்ரேல் போன்ற நாடுகளே!
சிங்களரின் இனவெறி கொடூரம் பக்கத்திலிருந்த தமிழ்நாட்டு மக்களை மட்டுமே எட்டியிருந்த நிலையில், அது  குறித்த வீடியோ ஆதாரங்களை உலகளாவிய ஒளிபரப்பாகச் செய்தது சேனல் 4. மறைக்கப்பட்ட உண்மைகளை அம்பலத்துக்குக் கொண்டுவந்தது. இந்தக் காட்சிகளைப் பார்த்து உலகம் அதிர்ந்தது.
அதுவரை இத்தனை ஆயிரம் பேரைக் கொன்றதாகச் சொல்கிறார்களே… இது மிகையாகத் தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பி வந்த உலக நாடுகள், உயிருடன் ஏதோ காக்கைகளைப் போல சுட்டுக் கொல்லப்படும் தமிழரைப் பார்த்து பேரதிர்ச்சி கொண்டனர்.
நாடுகள் தங்களுக்கிடையிலான அரசியலில் சிக்குண்டு இந்த விஷயம் குறித்து மவுனித்து நின்றாலும், மனிதாபிமானத்தை முன்னெடுத்துச் செல்லும் அமைப்புகள் பல நாடுகளின் இறுக்க வாயை திறக்க வைத்தன!
இலங்கையின் போர்க்குற்றம் என்ற வார்த்தை உலகளாவி நிற்கக் காரணம் இந்த வீடியோவும்தான்.
இந்த நிலையில் தற்போது இன்னொரு வீடியோ படத்தை சேனல் 4 உருவாக்கியுள்ளது. லண்டன் நேரப்படி புதன்கிழமை இரவு 10.55 மணியளவில் இந்த வீடியோ உலகம் முழுவதும் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த வீடியோவில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை, மனித இனமே வெட்கித் தலைகுனியுமளவுக்கு கொடூரமாக சிங்கள இனவெறி வீரர்கள் கொன்ற காட்சி அடங்கியுள்ளது. கூடவே தலைவர் பிரபாகரன் குறித்த பரபரப்புக் காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாக இந்த ஆவணப்படத்தைத் தயாரித்த காலம் மெக்காரே தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணப் படத்தை இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு பார்க்கலாம்.
ஐ. நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா, பிரான்ஸ், நார்வே ஆகிய நாடுகள் கொண்டு வந்துள்ளன. இந்தப் பின்னணியில் நாளை வெளியாகவுள்ள வீடியோ காட்சிகள்  இலங்கை மீதான அழுத்தத்தை பல மடங்கு அதிகரிக்கும், ஈழத் தமிழர் விடிவுக்கான முக்கிய ஆயுதமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிரபாகரன் தொடர்பான வீடியோவை இப்போது ஒளிபரப்புவது ஏன்?
இன்னொரு பக்கம், சிங்கள இனவெறி ஒரு இனத்தையே எப்படியெல்லாம் சின்னாபின்னமாக்கிவிட்டது என்பதைக் காட்டும் ஒரு வீடியோவில், இன்னமும் இருக்கிறார் என பெரும்பான்மைத் தமிழர்கள் நம்பும் பிரபாகரன் வீடியோ எதற்கு? அதன் உள்நோக்கம் என்ன என்ற கேள்வியை ஈழத் தமிழர் இணையங்கள், அமைப்புகள் எழுப்பியுள்ளன.
சேனல் 4 தனது நடுநிலைத் தன்மையைக் காட்ட, பிரபாகரன் வீடியோவைக் காட்டுகிறது என்றும், அவரது இருப்பு குறித்து காலம் மட்டுமே பதில் கூற வேண்டும் என்றும் இவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரபாகரன் தொடர்பான வீடியோ என ஏற்கெனவே இணையதளங்களில் ஏராளமான பதிவுகள் கிடக்கின்றன. இவை சிங்கள ராணுவம் மற்றும் இலங்கை அரசால் பரப்பப்பட்டவை. அவர்கள் பார்வையிலான பதிவுகளே அவை. அதில் ஏராளமான முரண்கள், சந்தேகங்கள். எனவேதான் இவற்றைப் பார்த்த பிறகும், பிரபாகரன் குறித்த நம்பிக்கையோடு உள்ளனர் உலகெங்கும் உள்ள தமிழர்கள்.
ஒருவேளை சேனல் 4 வீடியோவில் பிரபாகரன் குறித்த இதே காட்சிகளைப் பார்த்த பிறகு, அவற்றை ஏற்றுக் கொள்வார்களா தமிழர்கள்? மர்மங்கள் நீங்கப் பெறுமா? இலங்கையும் இந்தியாவும் கூட இன்னும் உறுதிப்படுத்த திணறும் ஒரு விஷயத்தை, எதன் அடிப்படையில் சேனல் 4 உறுதிப்படுத்த முனைகிறது என்ற கேள்விதான் இப்போது தமிழ்ச் சமூகத்தின் முன் நிற்கிறது!

நூலகத்தை மாத்தணும், புதிய தலைமைச் செயலகத்தை இடிக்கணும்… இங்கே என்னதான் நடக்குது?


அண்ணா நூலகத்தை மாத்தணும், புதிய தலைமைச் செயலகத்தை இடிக்கணும்…  என்னதான் நடக்கிறது இங்கே? – உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முறையாக பராமரித்து வருவதாகவும், அங்கு எந்த வசதியும் குறைக்கப்படவில்லை என்றும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திமுக ஆட்சியில் சென்னை கோட்டூர்புரத்தில் ரூ.172 கோடி செலவில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. இதனை நுங்கமபாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்திற்கு இடமாற்றம் செய்ய தமிழக அரசு தீர்மானித்தது. கடந்த 2.11.2011 அன்று அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்.பிரபாகரன், பி. புகழேந்தி, ஓய்வு பெற்ற ஆசிரியை எஸ்.டி. மனோன்மணி, மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி உட்பட பலர் பொதுநல மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். அப்போது மறு உத்தரவு வரும் வரை நூலகத்தை இடமாற்றம் செய்ய இடைக்கால தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் நூலகத்தில் உள்ள வசதிகளை அரசு திரும்பப்பெற்றால் அதனை நீதிமன்றம் கருத்தில் கொண்டு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று தெரிவித்திருந்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், நூலகத்தை இடமாற்றம் செய்வதற்காக அரசு எடுத்தது கொள்கை முடிவு ஆகும். அதனை நீதித்துறை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்திருந்தது.
இதனிடையே மனுதாரர்களில் ஒருவரான இளையபாரதி சார்பாக கூடுதல் மனு ஒன்றை மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தாக்கல் செய்தார். அதில் நூலகத்தில் உள்ள வசதிகளை அரசு குறைத்துவிட்டது. சந்தா செலுத்தி பத்திரிகைகளை வாங்குவது குறைந்துவி்ட்டது. எனவே, ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் குழு ஒன்றை அமைத்து அங்கு ஏற்படுத்தப்பட்ட வசதிகளின் குறைவு குறித்து விசாரித்து அறிக்கை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இம்மனு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான பிளீடர் வெங்கடேஷ் நூலகத்தின் சில போட்டோக்களையும், பதில் மனுவையும் தாக்கல் செய்தார். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜரானார்.
அப்போது அரசு பிளீடர் வெங்கடேஷ் கூறுகையில், “மனுதாரரின் குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை. நூலகத்தில் எந்த குறையும் அவர் நேரடியாக பார்த்ததாக குறிப்பிடவில்லை. இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் உள்நோக்கம் உள்ளது. எந்த பத்திரிக்கை நிறுத்தப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கவில்லை. மனுவில் கூறியுள்ள அனைத்தும் பொதுவான குற்றச்சாட்டுகள் ஆகும்.
நூலகத்தை டி.பி.ஐ.க்கு மாற்றினால் தான் அந்த சுற்றுப்புறத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு பயன் ஏற்படும். தற்போது நூலகம் உள்ள இடத்தின் சுற்றுப்புறத்தில் 8 கல்வி நிறுவனங்கள் தான் உள்ளன. எனவே அதன் பயன் அங்கு குறைவாக உள்ளது. கன்னிமாரா நூலகத்தையும் பெரிதாக கட்ட அரசு முடிவு செய்துள்ளது,” என்றார்.
அதற்கு பதிலளித்த பி.வில்சன், “இவ்வழக்கில் எந்த உள்நோக்கமும் இல்லை. குற்றச்சாட்டுகளை மனுவில் தெளிவாக கூறியுள்ளோம். அது தொடர்பான போட்டோக்களையும் சமர்பித்துள்ளோம். நாங்கள் அங்கு சென்று பார்த்த போது ஏ.சி. எந்திரம் வேலை செய்யவில்லை. அங்கு வருகிறவர்கள் வியர்வையில் நனைந்தபடி புத்தகம் படிக்கின்றனர். உள்ளே எலி ஓடுகின்றது. எனவே கமிட்டி அமைத்து அங்குள்ள வசதி குறைவுகள் குறித்து விசாரிக்க வேண்டும்,” என்றார்.
அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது:
“நூலகம் அங்கு இருக்க வேண்டும் என்பதுதான் மக்கள் விருப்பமாக உள்ளது. ராணிமேரி கல்லூரியையும், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டிடம் ஒன்றையும் இடிப்பதற்கு முன்பு முயற்சி நடைபெற்றது. தற்போது நூலகம் மற்றும் புதிய தலைமைச் செயலகத்தையும் இடித்து மாற்ற முனைகின்றீர்கள். என்னதான் நடக்கிறது?” என்றார்.
அப்போது மூத்த வழக்கறிஞர் காந்தி கூறுகையி்ல், “மற்ற இடத்தில் வேண்டுமானாலும் நூலகத்தை அரசு அமைக்கட்டும். ஆனால் அண்ணா நூலகத்தை அரசு மாற்றக் கூடாது. அதன் வடிவையும் மாற்றக் கூடாது,” என்றார்.
அதற்கு பதிலளித்த அரசு பிளீடர், “நூலகத்தை அரசு முறையாக பராமரித்து வருகின்றது. எந்த வசதிகளும் குறையாமல் தொடர்ந்து அதனை அரசு பராமரிக்கும்”, என்றார்.
அரசு உத்தரவாதம் அளித்ததை அடுத்து மனுதாரர் தனது மனுவை திரும்பப் பெற்றார். நூலகத்தை சரியாக பராமரிக்கவில்லை என்றால் மனுதாரர் மீண்டும் மனு தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். நூலகம் தொடர்பான முக்கிய வழக்கை ஏப்ரல் 17ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
இளையபாரதி மனுவுக்கு பதிலளித்து, பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் சபிதா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
அரசியல் சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்ட பிறகு இது போன்ற மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நூலகத்தை பராமரிக்காமல் அதை அப்படியே விடுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தவறு.
அங்குள்ள அனைத்து வசதிகளையும் மேம்படுத்தியுள்ளோம். கழிவறைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். மின்தடை இருக்கும் நிலையில் கூட தானாக இயங்கும் ஜெனரேட்டர் வைக்கப்பட்டு மின் வசதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள புத்தகங்கள், பத்திரிக்கைகள் எதுவும் குறைக்கப்படவில்லை. அனைத்து ஊழியர்களும் அங்கு தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tuesday, March 13, 2012

ஒரு ரூபாய் அரிசிக்கு 400 ரூபாய் எரிவாயுவா?


 
விறகடுப்பை பயன்படுத்திய முந்தைய சமூகத்தை நோக்கியே மீண்டும் நாம் படையெடுக்க ஆரம்பிக்கும் காலம் வந்து விட்டதுஇந்த நியாயவிலைக்கடையில் பொருட்களை வாங்குவதற்குத் தான் எத்தனை மாற்றங்களை கொண்டு வந்தது நமது அரசுநல்ல மாற்றங்கள் என்று நம்மை ஆதரவு அளிக்க வைத்து நியாயவிலைக்கடைகளின் நியாயமாக கோரிக்கைகள் என அவர்களை நியாயப்படுத்திக் காட்டிக் கொண்டனர்.
ஆரம்பம் முதலே மாதவருமானத்தின் அடிப்படையில் மனிதர்களை தரம் பிரிக்க ஆரம்பித்தர்மாதவருமானம் 5000-க்கு அதிகாமானோருக்கு ஒரு அட்டை எனவும் 5000-க்கு குறைவானவர்களுக்கு ஒரு அட்டை எனவும் தரம் பிரித்தனர்பின்னர் அந்த அட்டையின் அடிப்படையில் மேல்தட்ட மக்களான 5000வருமானம் வாங்குபவர்களுக்கு பாதி சலுகைகளை கொடுக்க மறுத்தனர்காரணம் கேட்டால் கீழ்தட்டு மக்களுக்கு அதிகமாக வழங்கி அவர்களை மேம்படுத்துவதற்காகவே இத்திட்டம் என்றார்கள்.
அதோடு மட்டுமாஅதிக அளவு சீனி வாங்கினால் அவர்களுக்கு அரிசி கிடையாது இது என்ன புதிய சட்டமோஅடுக்கடுக்கான அவலங்களின் பாதையில் தொடர்ந்து..., வாயு சிலிண்டர்கள் வைத்து இருந்தால் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவு மண்ணெண்ணெய் என்று புதிய சட்டம் பிறப்பிக்க ஆரம்பித்தனர் மீண்டும் விடாத கருப்பாய் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது இந்த ஊழல்.
சென்ற ஆட்சியிலாவது வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எரிவாயுவான மண்ணெண்ணெய் வினியோகம் செய்யப்பட்டது.வருடத்திற்கு 52கோடி லிட்டர் கண்டிப்பாக விநியோகம் செய்யப்பட்டு வந்ததுஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கினாலும் 400 ரூபாய்க்கு எரிவாயுவின் விலையை கூட்டியதோடு நிறுத்திக் கொண்டதுஆனால் இந்த ஆட்சியில் வாயு சிலிண்டர்களின் விலை முந்தைய ஆட்சியைவிட கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் மண்ணென்ணெய்யையும் வருடத்திற்கு 48 கோடி லிட்டர் மட்டுமே விநியோகம் செய்து வருகின்றனர்
மீதமுள்ள கோடி லிட்டர் மண்ணெண்ணெய்யை எங்கே கொண்டு செல்கிறார்களோ தெரியவில்லைஇப்படியே போனால் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் எல்லாம் முற்றிலும் அழிந்து விடும் தருணம் மிக தொலைவில் இல்லை.

ஆபத்து ! டீ குடித்தால் வயிற்றில் மெழுகு வளர்கிறதா?


 

தலைவலிக்கு டீ குடித்தால் , வயிற்றில் மெழுகு வளர்கிறதா?  என்ன அநியாயம் இது? 
நம்ம ஊர் காரர்களில் போதைக்கு அடிமையானவர்களை விட இந்த டீக்கு அடிமையானவர்கள் தான் பல கோடி பேர் உள்ளனர்.  
இன்று தெருவுக்கு தெரு டீ கடைகளின் ராஜ்ஜியம் கலை கட்டி வருகிறது.  
முன்பெல்லாம் கண்ணாடி குவளைகளை  பயன்படுத்தி வந்த கடைக்காரர்கள்  தண்ணீர் பற்றாக்குறையாலும் நேர விரயத்தை தவிர்ப்பதற்காகவும்  
ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் காகித குவளைகளை பயன்படுத்தி வருகிறார்கள்.  

ஆனால் அந்த காகித குவளை எப்படி உருவாக்கப் படுகிறது தெரியுமா?

திரவங்களினால் நனையாமல்  இருப்பதற்காக காகித குவளையை சுற்றிலும் மெழுகு தடவப் பட்டு தயாரிக்கப்படுகிறது. 

நேரடி தகவல்:  ஒரு பெரிய தொழில் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் நீண்ட நாள் வயிற்று வழியால் அவதிப்பட்டு
 பின்னர் மருத்துவரிடம் சென்று பார்த்தால் அவரது வயிற்றில் மெழுகு வளர்வதாக மருத்துவர் சொல்லி விட்டார்.  
பின்னர் என்ன காரணம் என அவரது உணவு பழக்க வழக்கங்களை பார்க்கும் போது அவர் அடிக்கடி  காகித குவளையில் டீ குடிப்பதாக தெரிய வந்தது.  

அவசர உலகில் அவசரமாக  வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், நம் உடலை முழுமையாக பாதுகாத்துக்  கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டால் முடிந்த வரை காகித குவளைகளை தவிர்க்க பாருங்கள். 

திருட்டு போன அல்லது காணாமல் மொபைலை திரும்பப் பெற..


 

உங்கள் மொபைல் போன் திருட்டு போய்விட்டதா....?

அல்லது

கவனக் குறைவாகத் தொலைத்து விட்டீர்களா...?


இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி
அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.


எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல்
இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான
ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து
டயல் செய்திடவும்.


இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல்
போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile
Equipment Identity) என அழைப்பார்கள்.


இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல்
கடிதம் அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net.


இதில் கீழ்க்காணும் தகவல்களை தர வேண்டும்:-


பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதியாக டயல்
செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும்
மொபைல் போனின் அடையாள எண்.


காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான
கட்டமைப்பினைக் கொண்டுள்ளது.


அந்த மொபைல் போன் பயன்படுத்தப்படும் பட்சத்தில், அதன் இடம், தற்போது
பயன்படுத்துபவரை அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும். உங்களுக்கும்
தெரியப்படுத்துவார்கள். 

குமுதம் ரிப்போர்ட்டர் 15-03-2012 Kumudam Reporter

Monday, March 12, 2012

மானம் கெட்ட தமிழனும்! மானம் உள்ள பீகாரிகளும்!


பீகார் மாநிலம், அவுரங்காபாத் அருகில் உள்ள நாபி என்ற இடத்தில் பீகார் மாநில அரசு 1800 மெகாவாட் உற்பத்தி திரன் கொண்ட அனல் மின்நிலையம் அமைத்து வருகிறது.

நாபியில் உள்ள பொது மக்களும் இந்த இடத்தில், அனல் மின்நிலையம் அமைக்க வேண்டாம் என்று போராடி வருகிறார்கள். (கவனிக்க வேண்டியது கூடங்குளம் அணு மின்நிலையம்  நாபி அனல் மின்நிலையம்).
 
இந்த நிலையில், தமிழகத்தில் திருச்சி மற்றும் இராணிப்பேட்டை ஆகிய இரண்டு இடங்களில் உள்ள பெல் நிறுவனத்திலிருந்து பீகார் மாநிலத்தில் அமையும் அந்த அனல் மின் நிலையத்துக்கு தேவையான தளவாட பொருட்களை ஏற்றிக்கொண்டு 60 லாரிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் புறப்பட்டது.

அவுரங்காபாத் அருகில் உள்ள நாபியை லாரிகள் நெருங்கிய போது போராட்டம் நடத்திய பீகார் மாநில பொதுமக்கள் தமிழக லாரிகளையும், அதிலுள்ள பொருட்களையும் இங்கு இறக்க கூடாது என்று சிறை பிடித்து வைத்துக் கொண்டனர். இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறியதாவது லாரி டிரைவர், கிளீனர்களுக்கு சரியான சாப்பாட்டு வசதியில்லாமல் கடந்த 57 நாட்களாக மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.  உடனே மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிந்திக்கவும்: மானம்கெட்ட கருணாநிதி, போலி கம்யூனிஸ்ட்கள், தீவிரவாத இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பார்பன ஹிந்துத்துவா கூட்டமான தினமலர், சோ, சுபிரமனிய சாமி வகைறாக்கள் ஏன் இந்த செய்திகளை பற்றி பேசவில்லை. ஒரு மாநிலத்தின் 60  லாரிகள் 57 நாட்களாக சிறை வைக்கப்பட்டுள்ளது இதை பற்றி ஏன் யாரும் வாய்திறக்க வில்லை. ஏன் இந்த மவுனம்? அதை பற்றி பேசினால் கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வேண்டும் என்று சொல்லும் தங்களது மக்கள் விரோத முகமூடி களைந்து விடும் என்கிற பயமா.

பீகார் நாபி மக்கள் மானம்கெட்ட தமிழர்களுக்கு ஒரு முன்னோடியாக திகழ்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது. தமிழக மக்களை போன்ற ஒரு மானம் ஈனம் இல்லாத ஜென்மங்களை உலகில் வேறு எந்த இனத்திலும் பார்க்க முடியாது. தனது உறவுகள் ஈழத்திலே கொல்லப்படும் போதும், தமிழக மீனவர்கள் கொல்லப்படும்போதும், வேடிக்கைபார்த்த கூட்டம் இன்று தனக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காக கூடங்குளம் மக்களை பலியாக கொடுக்க ஆயிரம் உப்பு, சப்பு இல்லாத காரணங்களை சொல்லி போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

பீகார் மக்கள் எதிர்ப்பது அணு உலையை அல்ல அனல் மின்நிலையத்தைதான் என்பதை இங்கே கவனிக்க வேண்டும். தங்கள் பகுதியின் இயற்க்கை வளங்களை, சுகாதாரத்தை எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையை கவனத்தில் கொண்டு அந்த மக்கள் தொலைநோக்கு சிந்தனையோடு இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். தமிழர்கள் இனியாவது திருந்துவார்களா? கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மொத்த தமிழகமும் கொதித்தெலுமா. இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவை வாக்களிக்கும்படி செய்ய தமிழர்கள் குரல் கொடுப்பார்களா .....

இந்தியாவைக் காணோம்............


இந்த ஊரில் நூத்தியம்பது மனித இனங்கள் இருக்குன்னு ஒரு சமயம் நகரத்தந்தையுடன் பேசிக்கிட்டு இருந்தப்பச் சொன்னார். எல்லா இனங்களும் சேர்ந்து கொண்டாடும் விதமா கல்ச்சர் கலோர் (Culture Galore) என்ற பெயரில் ஒரு விழா, மார்ச் மாச முன் பாதியில் எதாவது ஒரு சனிக்கிழமைகளில் கடந்த 12 வருசமா நடந்துக்கிட்டு இருக்கு. இங்கத்து கோடைகாலம் ஃபிப்ரவரியோடு முடிஞ்சுரும். மிச்சம்மீதி இருக்கும் வெயிலை எதுக்குப் பாழாக்கணும்? 


நம்மூர் நூலகமும், சிட்டிக்கவுன்ஸிலும், ரேஸ் ரிலேஷன்ஸ் அலுவலகமும், எத்னிக் கவுன்ஸிலும் ஒன்னு சேர்ந்து நடத்தும் விழா. உலகின் பலவேறு பகுதிகளில் இருந்தும் வந்து இங்கே வாழ்க்கை நடத்தும் மக்கள் தங்கள் கலை, கலாச்சாரம், உணவு, உடை, விளையாட்டு இப்படி இருக்கும் சமாச்சாரங்களை மற்ற இனங்களுக்கு எடுத்துக்காட்ட இதை விட வேற நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமா?
ஊருக்குள்ளில் அஞ்சு ஹெக்டேர் அளவில் இருக்கும் ஒரு விளையாட்டுத் திடலில் நடப்பதால் பார்க்கிங், ஸ்டால்ஸ், மேடை நிகழ்ச்சிகள் எல்லாத்துக்கும் வசதிதான். (நம்ம பக்கத்துப் பேட்டை என்பதால் கூடுதல் மகிழ்ச்சி.அஞ்சே நிமிச ட்ரைவ்) பொதுமக்களுக்கும் நுழைவுக்கட்டணம், பார்க்கிங் சார்ஜ் இப்படி ஒன்னும் இல்லை. முற்றிலும் இலவசம்.
மேடை நிகழ்ச்சிகளுக்கு தயாரிப்புச் செலவா ஒரு குழுவிற்கு 100 டாலர் மான்யமும் கொடுக்கறாங்க பத்து நிமிசத்துக்கு மேற்படாமல் இருக்கணும்.
மதியம் 12 முதல் நாலுமணி வரை நடக்கும் விழா என்பதால் ஒரு சுத்துச் சுத்திப் பார்த்துட்டு அங்கேயே ஸ்டால்களில் விற்பனைக்கு இருக்கும் சாப்பாடுகளில் பிடிச்ச ஐட்டங்களை வாங்கிக்கிட்டு மேடைக்கு முன்னால் உக்கார்ந்துக்கிட்டால் ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிச்சுக்கிட்டே உணவை உள்ளே தள்ளலாம்.
ஒரு பனிரெண்டரைக்குப் போய்ச்சேர்ந்தோம். கூடாரங்களும் மக்கள் கூட்டமுமா கலகலன்னு இருக்கு. பார்க்கிங் வார்டன் வரும் வண்டிகளின் எண்களைப் பதிஞ்சுக்கிட்டே சக்கரநாற்காலியில் இங்கும் அங்குமா பரபரப்பாப் போய்க்கிட்டு இருந்தார்.

ஒரு பக்கம் முழுசும் சாப்பாடுகள். இரான், எகிப்து, சீனா, தென் ஆஃப்ரிகா, ஜப்பான், கொரியா, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்துன்னு வகைவகையா. இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட இடம் காலியா அம்போன்னு கிடந்துச்சு. கடந்த சிலவருசங்களா இந்தியன் க்ளப் செயல்படாம முடங்கிக் கிடக்காம். தலைமை சரி இல்லை. கவுன்ஸில் கொடுக்கும் 'நிதி உதவியை எதாவது ஒரு ரூபத்தில் தானே அமுக்கணும்' என்ற அட்டூழியம்தான் காரணமாம். இந்த க்ளப்பை ஆரம்பிச்சவர் ( எல்லாம் நம்ம கோபால்தான்) மனசொடைஞ்சு வெத்து இடத்தைப் பார்த்தப்ப எனக்கு ரொம்பப் பாவமா இருந்துச்சு:(
ஒரு ஆறுதலான விஷயம் கோபியோ ( GOPIO : GLOBAL ORGANIZATION OF PEOPLE OF INDIAN ORIGIN)ஸ்டால் போட்டுருக்காங்க. அதே சமோஸா, பகோரா, நான், பட்டர் சிக்கன்,தால் மக்கானி, ரோகன் ஜோஷ், மட்டர் பனீர், மேங்கோ லஸ்ஸி வகைகள். இந்தியான்னாவே 'இந்த சாப்பாடு'ன்னு ஆகி கிடக்கு:(
எகிப்து நாட்டு ஸ்டாலில் உணவு வகைகள் ஏராளம். அதுலே நம்மூர் 'ஜாங்கிரிக்கு ஒன்னுவிட்ட தங்கை பேத்தி' மாதிரி ஒன்னு. அதுக்கு 'மெஷபெக்'ன்னு பெயர்!
இரான் ஸ்டாலில் கேசரி மாதிரி ரவையில் செஞ்சது ஒன்னும், இன்னும் ரெண்டு இனிப்புகளும் செஞ்சு வச்சு இலவசமா உபசரிச்சுக்கிட்டு இருந்தாங்க. கூடவே சின்ன கண்ணாடிக் கப்பில் சாயா! அந்தக் கெட்டில் ரொம்ப அழகா இருந்துச்சு. கையில் எடுத்து ரசித்தபோது, 'அழகா இருக்கா'ன்னு கேட்டுட்டு சவூதி அரேபியாவில் வாங்குனதுன்னாங்க:-)
ஜப்பான் பாரம்பரிய உடைகளில் சில சிறுசுகள் பசங்களுக்குப் போரடிக்காமல் இருக்க ராக் க்ளேய்ம்பிங், ஒரு வகையான Bபஞ்சி ஜம்பிங், இப்படி சில. காவல்துறை, நூலகம், ரேடியோ ஒலிபரப்பு இப்படி வழக்கமான கம்யூனிட்டி சேவைகளுக்கான கூடாரங்கள்.
மவோரிகளுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும் நடந்த ஒப்பந்தத்தின் விளக்கம், போஸ்டர்கள், புத்தகங்கள் இவையெல்லாம் ஒரு மேசை, இந்த ஊருக்குக் குடியேறும் நபர்களுக்கான விவரம் அடங்கிய எத்னிக் மைக்ரண்ட்ஸ் செண்டர் விபரங்கள் ஒரு மேசை, யுனைட்டட் நேஷன்ஸ் அசோஸியேஷன்ஸ் ஆஃப் நியூஸிலேண்ட், கிறைஸ்ட்சர்ச் மல்ட்டி கல்ச்சுரல் கவுன்ஸில் இப்படி ஒவ்வொன்னும் ஒரு மேசை போட்டு விவரங்களை அடுக்கி வச்சு விளக்கிச் சொல்ல ரெவ்வெண்டு ஆட்களுடன் ஒரு பெரிய கூடாரத்துலே இருந்தாங்க.
அலங்காரச்சாமான்கள், நகைநட்டுகள் கொஞ்சம் துணிமணிகள் இப்படி எகிப்து நாட்டுப்பொருட்கள் இருந்துச்சு. மொத்ததுலேயும் எகிப்தியர்கள்தான் நல்ல ஆக்டிவா இருக்காங்க போல!
மினி ஆப்பம்
இந்தோனேஷியாவுக்கான கூடாரப்பகுதியில் மினி ஆப்பம் போல ஒன்னு அடுக்கிவச்சுத் தின்னு பார்க்கச் சொன்னாங்க. அரிசி மாவுதானாம். பக்கத்துலே ஒரு சின்னக்கண்ணாடி டம்ப்ளரில் தேங்காய்ப்பால். இதை எடுத்து அதில் தொட்டு வாயில் போட்டுக்கணுமாம்! ம்ம்ம்ம் இருக்கட்டும்
ஷெட்லேண்ட் சொஸைட்டியில் கொம்பு ஆப்ட்டது. மனிதனும் மிருகமும் சேர்ந்த கலவை! இந்த மாச 'பிட்'க்கு அனுப்பி இருக்கலாம்:-)))
மவொரிகள் கலையான ஃப்ளாக்ஸ் செடியின் ஓலைகளைப் பின்னுதல், சேண்ட் ஸ்டோனில் சிற்பம் செதுக்குவது எல்லாம் முதல்முறையா இங்கே காட்சிக்கு வந்துருக்கு. சின்னக் கற்களை வச்சு செதுக்கி எடுக்க ஒரு ஒர்க்ஷாப் போல பயிற்சி கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. மணல்துகள் கண்களில் தெறிக்காமல் இருக்க பாதுகாப்புக் கவசம் போட்டுக்கிட்டுப் பசங்க இழைச்சுப்பார்த்துக்கிட்டு இருந்தாங்க.
ஓலை முடைதல் இன்னொரு ஷெட்டில். அங்கேயே ஸோப் கட்டிகளில் வளைவு நெளிவுகளோடு மவொரி கலை அம்சங்களைச் செதுக்கச் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருந்தார் ஒருத்தர். நம்ம கோல டிஸைன்களைப்போலத்தான் மவொரி கலைகளில் வளைவும் நெளிவுகளும் ஏராளம். கேமெராப் பார்த்தவுடன், ஐயோ மேக்கப் போட்டுக்கலையேன்னு கவலைப்பட்டார்.:-))))
காதுக்குள்ளே பழக்கப்பட்ட இசை விழுந்ததும் என்ன ஏதுன்னு பாய்ஞ்சேன். மேடையில் ரெண்டு பெண்கள் 'கதக்' ஆடிக்கிட்டு இருந்தாங்க. இங்கே தெரிஞ்சவங்க ஒருத்தர் நடத்தும் கதக் பள்ளியின் மாணவிகள். அநேகமா பள்ளியின் மொத்த மாணவிகளுமே அவ்ளோதான்!
தாய்லாந்து, சமோவா, பிலிப்பைன்ஸ், நடனங்கள் நடந்து முடிஞ்சதும் உள்ளூர் பரதநாட்டியப்பள்ளியின் மாணவிகள் டீச்சருடன் சேர்ந்து 'ஆடிக்கொண்டார், அந்த வேடிக்கை காணக் கண்' ஆயிரம் வேண்டாமோ'க்கு ஆடுனாங்க. நிகழ்ச்சி அறிவிப்பாளர் பார்வையாளர்களுக்கு இந்தக் கலையின் பெயரை 'பர தன டியம்' என்று சொல்லிக்கொடுக்க ஜனம் அதை ரிப்பீட் செஞ்சது. சுக்குமி ளகுதி ப்பிலி !!!!! லாடின் அமெரிக்கா, நடனம் சொல்லிக்கொடுக்கும் பள்ளிப்பிள்ளைகள் கோ ரைட் கோ லெஃப்ட்ன்னு ஸ்டெப்ஸ் போட்டுக் காமிச்சாங்க. பெரியவர்கள் மூணு ஜோடி ஸம்பா, ச்ச ச்ச ச்ச ஆடுனாங்க.
சமோவா குழு

சீனப்பிள்ளைகள் மார்ஷியல் ஆர்ட் செஞ்சு காமிச்சாங்க. பிள்ளைகளின் தந்தை இங்கே இந்தக் கலையைச் சொல்லிக்கொடுக்கும் பள்ளி நடத்தறார். பள்ளி பள்ளின்னா ரெகுலர் பள்ளிக்கூடம் இல்லை. வார இறுதிகளில் வகுப்பு நடத்தித்தான் மக்கள் அவுங்கவுங்க கலைகளை வளர்த்துக்கிட்டு இருக்காங்களாக்கும் கேட்டோ!
கொரியா


கலர்ஃபுல்லா கொரியன் நடனம். நம்ம ஹரே க்ருஷ்ணா பிள்ளைங்க மூவர் (சிஸ்டர்ஸ்) கோபிகைகளும் கிருஷ்ணாவுமா ஆடினாங்க. இந்தப் பிள்ளைகள் இந்த கல்ச்சுரல் விழாவைத் தவறவிட்டதே இல்லை. சீனியர் மோஸ்ட்:-))))

வயிறு கிள்ளுதே...பார்த்தவரை போதுமுன்னு 'சபை'யை விட்டு எழுந்து வந்தோம். இந்தியன் க்ளப் அடையாளமே இல்லை. தோழி இது ஹோலி சீஸனா இருக்கேன்னு மசாலா டப்பாவில் ஏழு கலர்ப்பொடிகளுடன் காத்திருந்தாங்க. நெற்றியில் நாமம் வாங்கிக்கிட்டு இவ்வளவு ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தில் 'இந்தியா காணாமப் போயிருச்சே'ன்ற கவலையுடன் வீட்டுக்குப் போய் சாப்பிட்டோம்.

விண்ணப்ப விற்பனை வழியாக TRB-கு கோடிகணக்கில் வருவாய்-தினகரன்

அமெரிக்காவின் தீர்மானம் ஜெயித்தால் கூட ஒரு வெங்காயமும் கிடைக்கப் போவதில்லை !


rajapaksa_Maria_Oteroஐ.நா. சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஏதிராக அமெரிக்க கொண்டு வரும் தீர்மானம் இலங்கை அரசுக்கு சர்வதேச அளவில் தலைவலியை ஏற்படுத்தும் என்றும் தமிழர்களுக்கு நீதியை பெற்றுத் தரும் என்றும் உலகளாவிய நம்பிக்கை வைத்திருந்தனர் தமிழர்கள்.

இந்த விவகாரம் பற்றிய நமது முந்தைய கட்டுரைகளில் கூட ‘இந்தத் தீர்மானம் இலங்கை அரசுக்கு எதிராக வெற்றி பெற்றால் கூட இலங்கைக்கு எந்த பெரிய பிரச்னையும் இல்லை’ என்று தான் சொல்லி வந்தோம்.

அதே நேரம் இப்போது அமெரிக்காவின் சதிமுகமும் அம்பலத்துக்கு வந்திருக்கிறது. மார்ச் 7ம் தேதி ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கொண்டு வரப்பட்டிருக்கும் அந்தத் தீர்மானத்தைப் படித்தாலே, தமிழர்களின் தலையை அமெரிக்கா எப்படி தடவியிருக்கிறது என்பது தெரியும்.

“பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகள் சர்வதேச விதிகளுக்கு அமைவாகwar_cirme_11 இருப்பதை உறுதிப்படுத்திட.... கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆனைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி, சகல இலங்கையர்க்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்படுவதை உறுத்திபடுத்த வேண்டும்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்த பரிந்துரைகளில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இனி என்ன எடுக்கப்பட இருக்கிறது என்ற விவரங்களை இலங்கை அரசு மனித உரிமை பேரவையின் முன்பு வைக்க வேண்டும். போரில் சர்வதேச சட்ட விதிகள் மீறப்பட்ட புகார்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் எடுப்பதற்காக இலங்கைக்கு ஐ.நா. தொழில்நுட்ப உதவிகளை செய்ய வேண்டும். அதை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்”

அட.... அட..... அட... என்னே ஒரு வலிமையான தீர்மானம். “நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன். நீ அழுகிற மாதிரி அழு” என்ற பழமொழிக்கு ஏற்ப பார்த்தால் கூட அமெரிக்காவின் கண்டிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இலங்கையை சாட்டையால் அடிக்கப்போகிறேன் என்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி.... அப்பாவி தமிழர்களிடையே மீண்டும் உணர்ச்சிக் கொந்தளிப்பை உருவாக்கி.... எதிர்பார்க்க வைத்து.... ஏங்க வைத்து... கடைசியில் இலங்கை மீது ஒரு பூவை எடுத்து போட்டு, “அதட்டலாகத்தான் போட்டேன்” என்று ஒட்டு மொத்த தமிழர்களின் காதில் பூ சுற்றியிருக்கிறது அமெரிக்கா.

rajabakse_with_manஅமெரிக்காவின் இந்தத் தீர்மானம் முழுக்க முழுக்க இலங்கைக்கு சாதகமானதோ இல்லையோ... முழுக்க முழுக்க தமிழர்களுக்கு பாதகமானது. எப்படி?

அமெரிக்க தனது தீர்மானத்தில் நடந்து முடிந்த இலங்கை போர் பற்றி விசாரித்த, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தச் சொல்லியிருக்கிறது. அந்த அறிக்கையை யார் தயாரித்தது?

இலங்கை அரசு தான் நடத்திய போர் பற்றி தானே தயாரித்ததுதான் அந்த அறிக்கை. அதில் என்ன சொல்லியிருக்கிறது? “போரில் மனித உரிமைகளை மீறியிருப்பதாக சேனல்-4 வெளியிட்ட வீடியோ காட்சிகள் பொய். மேலும் ஐ.நா. நிபுணர் குழு விசார்ணை அறிக்கையில் இலங்கை அரசை குறை கூறியிருக்கும் விஷயங்களும் உண்மைக்கு மாறானவை” என்று சொல்லியிருக்கிறது.

இந்த அறிக்கையைத்தான் விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க சொல்கிறது. அதாவது படுகொலையை செய்த ராஜபக்‌ஷே... நான் படுகொலையே செய்யவில்லை என்று தயாரித்த அறிக்கையை அப்படியே ஆமோதிக்கிறது அமெரிக்கா.

இந்தத் தீர்மானம் ஜெயித்தால் கூட தமிழர்களுக்கு இரு வெங்காயமும் கிடைக்கப் போவதில்லை.

அதே நேரம், தமிழ் ஈழத்தை தணியாத தாகமாகக் கொண்ட தமிழர்களுக்கு அமெரிக்கா war-crimes-colomboதனக்கே உரிய பாணியில் ஆப்பு வைத்துவிட்டது. அதாவது தனது தீர்மானத்தில் அமெரிக்கா, ’சகல இலங்கையருக்கும் நல்லிணக்கம் ஏற்படச் செய்ய வேண்டும்” என்று கேட்கிறது. சகல இலங்கையர்கள் என்றால், அதில் சிங்களவர்களையும் தமிழர்களையும் சேர்த்துத்தான் அமெரிக்கா அணுகுகிறது.

இதனால், மனித உரிமைப் பேரவையில் தமிழர்களை மையமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டிருந்த மாயை உடைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். அமெரிக்க மனித உரிமைப் பேரவையில் இப்படி உப்புச்சப்பற்ற இலங்கையோடு மறைமுக உடன்பாடு கொண்ட ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்த அதே 7ம் தேதி லண்டனில் சர்வதேச அறிஞர்கள் கலந்துக் கொண்ட கூட்டம் நடந்தது.

அதில் பேசிய பலரும் “2009ம் ஆண்டு புலிகளுக்கு ஏதிராக நடந்த போரில் இலங்கை அரசுக்கு அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ஈரான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அச்சரியப்படத் தக்க வகையில் கூட்டு சேர்ந்து செயல்பட்டு, தமிழர்களை அழித்தன. மூன்று வருடங்களுக்கு முன் தமிழர்களை கொன்று குவிக்க ஆதரவாக இருந்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இப்போது தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று நம்பி ஏமாறாதீர்கள். மேற்குலகத்தை நம்பி எந்த முன்னெடுப்பும் செய்வது வீண் வேலை” என்றே எச்சரித்தனர்.

Nirupama_Rao_rajapaksaமுழுதாக சொல்லப்போனால் தமிழர்களுக்கு எதிரான இந்தத் தீர்மானத்தை எதிர்த்து இலங்கையில் ஏன் சிங்களர்கள் போராட்டத்தில் இறங்கினர். “ராஜபக்‌ஷே அரசு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை சந்தித்து வருகிறது. இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்த்தி இருக்கிறது. இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்த்தி இருக்கிறது. போருக்குப் பிறகு எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படாததால், வேலையில்லாத திண்டாட்டமும் வறுமையும் ஏமாற்றி திசை திருப்பத்தான் இந்தத் தீர்மானம் சிங்களர்களுக்கு எதிரானது என்று மாயையை ஏற்படுத்தி ராஜபக்‌ஷே தன்னை காப்பாற்றிக் கொண்டார்” என்கிறார்கள் கொழும்பு ஊடகவியலாளர்கள்.

ஆக.... அமெரிக்கா, ஈழத் தமிழர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள், தமிழ்நாட்டு தமிழர்கள் அனைவரையும் ஏமாற்றிவிட்டது. இதை வைத்து, ராஜ பக்‌ஷே தன் லோக்கல் பிரச்னைகளை சமாளிக்க சிங்களர்களை ஏமாற்றிவிட்டார். நாடகத்தின் முடிவில் ரத்தம் வழியும் தலையோடு துடித்துக் கொண்டிருப்பது ஈழத்தமிழர்கள் தான் !

நன்றி: ஆரா(தமிழக அரசியல்)