Pages

Wednesday, March 7, 2012

தவறான வேட்பாளர் தேர்வே தோல்விக்கு காரணம் : சோனியா




உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு தவறான வேட்பாளர்கள் தேர்வே காரணம் என காங்கிரஸ் கட்சி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ள வந்த சோனியா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தவறான வேட்பாளர்கள் தேர்வே, தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. உத்தரபிரதேச மாநிலத்தில், மாநில காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்படாததும் தோல்விக்கு அடிகோலியது. 

பாடம் : இந்த தேர்தலின் மூலம், காங்கிரஸ் கட்சி பாடம் கற்றுக்கொண்டுள்ளது. தோல்விக்கான காரணங்கள் குறித்து அந்தந்த மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதிப்பு இல்லை : இத்தேர்தல் முடிவுகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது. 

பிரதமர் மாற்றமா? : பிரதமர் மன்மோகன் சிங் மாற்றப்படுமா என்ற கேள்விக்கு, தற்போதைக்கு அந்த எண்ணம் இல்லை என்றும், 2014ம் ஆண்டு தான் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது தான் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment