Pages

Tuesday, March 13, 2012

ஆபத்து ! டீ குடித்தால் வயிற்றில் மெழுகு வளர்கிறதா?


 

தலைவலிக்கு டீ குடித்தால் , வயிற்றில் மெழுகு வளர்கிறதா?  என்ன அநியாயம் இது? 
நம்ம ஊர் காரர்களில் போதைக்கு அடிமையானவர்களை விட இந்த டீக்கு அடிமையானவர்கள் தான் பல கோடி பேர் உள்ளனர்.  
இன்று தெருவுக்கு தெரு டீ கடைகளின் ராஜ்ஜியம் கலை கட்டி வருகிறது.  
முன்பெல்லாம் கண்ணாடி குவளைகளை  பயன்படுத்தி வந்த கடைக்காரர்கள்  தண்ணீர் பற்றாக்குறையாலும் நேர விரயத்தை தவிர்ப்பதற்காகவும்  
ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் காகித குவளைகளை பயன்படுத்தி வருகிறார்கள்.  

ஆனால் அந்த காகித குவளை எப்படி உருவாக்கப் படுகிறது தெரியுமா?

திரவங்களினால் நனையாமல்  இருப்பதற்காக காகித குவளையை சுற்றிலும் மெழுகு தடவப் பட்டு தயாரிக்கப்படுகிறது. 

நேரடி தகவல்:  ஒரு பெரிய தொழில் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் நீண்ட நாள் வயிற்று வழியால் அவதிப்பட்டு
 பின்னர் மருத்துவரிடம் சென்று பார்த்தால் அவரது வயிற்றில் மெழுகு வளர்வதாக மருத்துவர் சொல்லி விட்டார்.  
பின்னர் என்ன காரணம் என அவரது உணவு பழக்க வழக்கங்களை பார்க்கும் போது அவர் அடிக்கடி  காகித குவளையில் டீ குடிப்பதாக தெரிய வந்தது.  

அவசர உலகில் அவசரமாக  வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், நம் உடலை முழுமையாக பாதுகாத்துக்  கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டால் முடிந்த வரை காகித குவளைகளை தவிர்க்க பாருங்கள். 

திருட்டு போன அல்லது காணாமல் மொபைலை திரும்பப் பெற..


 

உங்கள் மொபைல் போன் திருட்டு போய்விட்டதா....?

அல்லது

கவனக் குறைவாகத் தொலைத்து விட்டீர்களா...?


இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி
அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும்.


எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல்
இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான
ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து
டயல் செய்திடவும்.


இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல்
போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile
Equipment Identity) என அழைப்பார்கள்.


இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல்
கடிதம் அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net.


இதில் கீழ்க்காணும் தகவல்களை தர வேண்டும்:-


பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதியாக டயல்
செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும்
மொபைல் போனின் அடையாள எண்.


காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான
கட்டமைப்பினைக் கொண்டுள்ளது.


அந்த மொபைல் போன் பயன்படுத்தப்படும் பட்சத்தில், அதன் இடம், தற்போது
பயன்படுத்துபவரை அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும். உங்களுக்கும்
தெரியப்படுத்துவார்கள். 

குமுதம் ரிப்போர்ட்டர் 15-03-2012 Kumudam Reporter

Monday, March 12, 2012

மானம் கெட்ட தமிழனும்! மானம் உள்ள பீகாரிகளும்!


பீகார் மாநிலம், அவுரங்காபாத் அருகில் உள்ள நாபி என்ற இடத்தில் பீகார் மாநில அரசு 1800 மெகாவாட் உற்பத்தி திரன் கொண்ட அனல் மின்நிலையம் அமைத்து வருகிறது.

நாபியில் உள்ள பொது மக்களும் இந்த இடத்தில், அனல் மின்நிலையம் அமைக்க வேண்டாம் என்று போராடி வருகிறார்கள். (கவனிக்க வேண்டியது கூடங்குளம் அணு மின்நிலையம்  நாபி அனல் மின்நிலையம்).
 
இந்த நிலையில், தமிழகத்தில் திருச்சி மற்றும் இராணிப்பேட்டை ஆகிய இரண்டு இடங்களில் உள்ள பெல் நிறுவனத்திலிருந்து பீகார் மாநிலத்தில் அமையும் அந்த அனல் மின் நிலையத்துக்கு தேவையான தளவாட பொருட்களை ஏற்றிக்கொண்டு 60 லாரிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் புறப்பட்டது.

அவுரங்காபாத் அருகில் உள்ள நாபியை லாரிகள் நெருங்கிய போது போராட்டம் நடத்திய பீகார் மாநில பொதுமக்கள் தமிழக லாரிகளையும், அதிலுள்ள பொருட்களையும் இங்கு இறக்க கூடாது என்று சிறை பிடித்து வைத்துக் கொண்டனர். இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறியதாவது லாரி டிரைவர், கிளீனர்களுக்கு சரியான சாப்பாட்டு வசதியில்லாமல் கடந்த 57 நாட்களாக மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.  உடனே மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிந்திக்கவும்: மானம்கெட்ட கருணாநிதி, போலி கம்யூனிஸ்ட்கள், தீவிரவாத இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பார்பன ஹிந்துத்துவா கூட்டமான தினமலர், சோ, சுபிரமனிய சாமி வகைறாக்கள் ஏன் இந்த செய்திகளை பற்றி பேசவில்லை. ஒரு மாநிலத்தின் 60  லாரிகள் 57 நாட்களாக சிறை வைக்கப்பட்டுள்ளது இதை பற்றி ஏன் யாரும் வாய்திறக்க வில்லை. ஏன் இந்த மவுனம்? அதை பற்றி பேசினால் கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க வேண்டும் என்று சொல்லும் தங்களது மக்கள் விரோத முகமூடி களைந்து விடும் என்கிற பயமா.

பீகார் நாபி மக்கள் மானம்கெட்ட தமிழர்களுக்கு ஒரு முன்னோடியாக திகழ்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது. தமிழக மக்களை போன்ற ஒரு மானம் ஈனம் இல்லாத ஜென்மங்களை உலகில் வேறு எந்த இனத்திலும் பார்க்க முடியாது. தனது உறவுகள் ஈழத்திலே கொல்லப்படும் போதும், தமிழக மீனவர்கள் கொல்லப்படும்போதும், வேடிக்கைபார்த்த கூட்டம் இன்று தனக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காக கூடங்குளம் மக்களை பலியாக கொடுக்க ஆயிரம் உப்பு, சப்பு இல்லாத காரணங்களை சொல்லி போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

பீகார் மக்கள் எதிர்ப்பது அணு உலையை அல்ல அனல் மின்நிலையத்தைதான் என்பதை இங்கே கவனிக்க வேண்டும். தங்கள் பகுதியின் இயற்க்கை வளங்களை, சுகாதாரத்தை எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையை கவனத்தில் கொண்டு அந்த மக்கள் தொலைநோக்கு சிந்தனையோடு இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். தமிழர்கள் இனியாவது திருந்துவார்களா? கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மொத்த தமிழகமும் கொதித்தெலுமா. இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவை வாக்களிக்கும்படி செய்ய தமிழர்கள் குரல் கொடுப்பார்களா .....

இந்தியாவைக் காணோம்............


இந்த ஊரில் நூத்தியம்பது மனித இனங்கள் இருக்குன்னு ஒரு சமயம் நகரத்தந்தையுடன் பேசிக்கிட்டு இருந்தப்பச் சொன்னார். எல்லா இனங்களும் சேர்ந்து கொண்டாடும் விதமா கல்ச்சர் கலோர் (Culture Galore) என்ற பெயரில் ஒரு விழா, மார்ச் மாச முன் பாதியில் எதாவது ஒரு சனிக்கிழமைகளில் கடந்த 12 வருசமா நடந்துக்கிட்டு இருக்கு. இங்கத்து கோடைகாலம் ஃபிப்ரவரியோடு முடிஞ்சுரும். மிச்சம்மீதி இருக்கும் வெயிலை எதுக்குப் பாழாக்கணும்? 


நம்மூர் நூலகமும், சிட்டிக்கவுன்ஸிலும், ரேஸ் ரிலேஷன்ஸ் அலுவலகமும், எத்னிக் கவுன்ஸிலும் ஒன்னு சேர்ந்து நடத்தும் விழா. உலகின் பலவேறு பகுதிகளில் இருந்தும் வந்து இங்கே வாழ்க்கை நடத்தும் மக்கள் தங்கள் கலை, கலாச்சாரம், உணவு, உடை, விளையாட்டு இப்படி இருக்கும் சமாச்சாரங்களை மற்ற இனங்களுக்கு எடுத்துக்காட்ட இதை விட வேற நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமா?
ஊருக்குள்ளில் அஞ்சு ஹெக்டேர் அளவில் இருக்கும் ஒரு விளையாட்டுத் திடலில் நடப்பதால் பார்க்கிங், ஸ்டால்ஸ், மேடை நிகழ்ச்சிகள் எல்லாத்துக்கும் வசதிதான். (நம்ம பக்கத்துப் பேட்டை என்பதால் கூடுதல் மகிழ்ச்சி.அஞ்சே நிமிச ட்ரைவ்) பொதுமக்களுக்கும் நுழைவுக்கட்டணம், பார்க்கிங் சார்ஜ் இப்படி ஒன்னும் இல்லை. முற்றிலும் இலவசம்.
மேடை நிகழ்ச்சிகளுக்கு தயாரிப்புச் செலவா ஒரு குழுவிற்கு 100 டாலர் மான்யமும் கொடுக்கறாங்க பத்து நிமிசத்துக்கு மேற்படாமல் இருக்கணும்.
மதியம் 12 முதல் நாலுமணி வரை நடக்கும் விழா என்பதால் ஒரு சுத்துச் சுத்திப் பார்த்துட்டு அங்கேயே ஸ்டால்களில் விற்பனைக்கு இருக்கும் சாப்பாடுகளில் பிடிச்ச ஐட்டங்களை வாங்கிக்கிட்டு மேடைக்கு முன்னால் உக்கார்ந்துக்கிட்டால் ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிச்சுக்கிட்டே உணவை உள்ளே தள்ளலாம்.
ஒரு பனிரெண்டரைக்குப் போய்ச்சேர்ந்தோம். கூடாரங்களும் மக்கள் கூட்டமுமா கலகலன்னு இருக்கு. பார்க்கிங் வார்டன் வரும் வண்டிகளின் எண்களைப் பதிஞ்சுக்கிட்டே சக்கரநாற்காலியில் இங்கும் அங்குமா பரபரப்பாப் போய்க்கிட்டு இருந்தார்.

ஒரு பக்கம் முழுசும் சாப்பாடுகள். இரான், எகிப்து, சீனா, தென் ஆஃப்ரிகா, ஜப்பான், கொரியா, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்துன்னு வகைவகையா. இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட இடம் காலியா அம்போன்னு கிடந்துச்சு. கடந்த சிலவருசங்களா இந்தியன் க்ளப் செயல்படாம முடங்கிக் கிடக்காம். தலைமை சரி இல்லை. கவுன்ஸில் கொடுக்கும் 'நிதி உதவியை எதாவது ஒரு ரூபத்தில் தானே அமுக்கணும்' என்ற அட்டூழியம்தான் காரணமாம். இந்த க்ளப்பை ஆரம்பிச்சவர் ( எல்லாம் நம்ம கோபால்தான்) மனசொடைஞ்சு வெத்து இடத்தைப் பார்த்தப்ப எனக்கு ரொம்பப் பாவமா இருந்துச்சு:(
ஒரு ஆறுதலான விஷயம் கோபியோ ( GOPIO : GLOBAL ORGANIZATION OF PEOPLE OF INDIAN ORIGIN)ஸ்டால் போட்டுருக்காங்க. அதே சமோஸா, பகோரா, நான், பட்டர் சிக்கன்,தால் மக்கானி, ரோகன் ஜோஷ், மட்டர் பனீர், மேங்கோ லஸ்ஸி வகைகள். இந்தியான்னாவே 'இந்த சாப்பாடு'ன்னு ஆகி கிடக்கு:(
எகிப்து நாட்டு ஸ்டாலில் உணவு வகைகள் ஏராளம். அதுலே நம்மூர் 'ஜாங்கிரிக்கு ஒன்னுவிட்ட தங்கை பேத்தி' மாதிரி ஒன்னு. அதுக்கு 'மெஷபெக்'ன்னு பெயர்!
இரான் ஸ்டாலில் கேசரி மாதிரி ரவையில் செஞ்சது ஒன்னும், இன்னும் ரெண்டு இனிப்புகளும் செஞ்சு வச்சு இலவசமா உபசரிச்சுக்கிட்டு இருந்தாங்க. கூடவே சின்ன கண்ணாடிக் கப்பில் சாயா! அந்தக் கெட்டில் ரொம்ப அழகா இருந்துச்சு. கையில் எடுத்து ரசித்தபோது, 'அழகா இருக்கா'ன்னு கேட்டுட்டு சவூதி அரேபியாவில் வாங்குனதுன்னாங்க:-)
ஜப்பான் பாரம்பரிய உடைகளில் சில சிறுசுகள் பசங்களுக்குப் போரடிக்காமல் இருக்க ராக் க்ளேய்ம்பிங், ஒரு வகையான Bபஞ்சி ஜம்பிங், இப்படி சில. காவல்துறை, நூலகம், ரேடியோ ஒலிபரப்பு இப்படி வழக்கமான கம்யூனிட்டி சேவைகளுக்கான கூடாரங்கள்.
மவோரிகளுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும் நடந்த ஒப்பந்தத்தின் விளக்கம், போஸ்டர்கள், புத்தகங்கள் இவையெல்லாம் ஒரு மேசை, இந்த ஊருக்குக் குடியேறும் நபர்களுக்கான விவரம் அடங்கிய எத்னிக் மைக்ரண்ட்ஸ் செண்டர் விபரங்கள் ஒரு மேசை, யுனைட்டட் நேஷன்ஸ் அசோஸியேஷன்ஸ் ஆஃப் நியூஸிலேண்ட், கிறைஸ்ட்சர்ச் மல்ட்டி கல்ச்சுரல் கவுன்ஸில் இப்படி ஒவ்வொன்னும் ஒரு மேசை போட்டு விவரங்களை அடுக்கி வச்சு விளக்கிச் சொல்ல ரெவ்வெண்டு ஆட்களுடன் ஒரு பெரிய கூடாரத்துலே இருந்தாங்க.
அலங்காரச்சாமான்கள், நகைநட்டுகள் கொஞ்சம் துணிமணிகள் இப்படி எகிப்து நாட்டுப்பொருட்கள் இருந்துச்சு. மொத்ததுலேயும் எகிப்தியர்கள்தான் நல்ல ஆக்டிவா இருக்காங்க போல!
மினி ஆப்பம்
இந்தோனேஷியாவுக்கான கூடாரப்பகுதியில் மினி ஆப்பம் போல ஒன்னு அடுக்கிவச்சுத் தின்னு பார்க்கச் சொன்னாங்க. அரிசி மாவுதானாம். பக்கத்துலே ஒரு சின்னக்கண்ணாடி டம்ப்ளரில் தேங்காய்ப்பால். இதை எடுத்து அதில் தொட்டு வாயில் போட்டுக்கணுமாம்! ம்ம்ம்ம் இருக்கட்டும்
ஷெட்லேண்ட் சொஸைட்டியில் கொம்பு ஆப்ட்டது. மனிதனும் மிருகமும் சேர்ந்த கலவை! இந்த மாச 'பிட்'க்கு அனுப்பி இருக்கலாம்:-)))
மவொரிகள் கலையான ஃப்ளாக்ஸ் செடியின் ஓலைகளைப் பின்னுதல், சேண்ட் ஸ்டோனில் சிற்பம் செதுக்குவது எல்லாம் முதல்முறையா இங்கே காட்சிக்கு வந்துருக்கு. சின்னக் கற்களை வச்சு செதுக்கி எடுக்க ஒரு ஒர்க்ஷாப் போல பயிற்சி கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. மணல்துகள் கண்களில் தெறிக்காமல் இருக்க பாதுகாப்புக் கவசம் போட்டுக்கிட்டுப் பசங்க இழைச்சுப்பார்த்துக்கிட்டு இருந்தாங்க.
ஓலை முடைதல் இன்னொரு ஷெட்டில். அங்கேயே ஸோப் கட்டிகளில் வளைவு நெளிவுகளோடு மவொரி கலை அம்சங்களைச் செதுக்கச் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருந்தார் ஒருத்தர். நம்ம கோல டிஸைன்களைப்போலத்தான் மவொரி கலைகளில் வளைவும் நெளிவுகளும் ஏராளம். கேமெராப் பார்த்தவுடன், ஐயோ மேக்கப் போட்டுக்கலையேன்னு கவலைப்பட்டார்.:-))))
காதுக்குள்ளே பழக்கப்பட்ட இசை விழுந்ததும் என்ன ஏதுன்னு பாய்ஞ்சேன். மேடையில் ரெண்டு பெண்கள் 'கதக்' ஆடிக்கிட்டு இருந்தாங்க. இங்கே தெரிஞ்சவங்க ஒருத்தர் நடத்தும் கதக் பள்ளியின் மாணவிகள். அநேகமா பள்ளியின் மொத்த மாணவிகளுமே அவ்ளோதான்!
தாய்லாந்து, சமோவா, பிலிப்பைன்ஸ், நடனங்கள் நடந்து முடிஞ்சதும் உள்ளூர் பரதநாட்டியப்பள்ளியின் மாணவிகள் டீச்சருடன் சேர்ந்து 'ஆடிக்கொண்டார், அந்த வேடிக்கை காணக் கண்' ஆயிரம் வேண்டாமோ'க்கு ஆடுனாங்க. நிகழ்ச்சி அறிவிப்பாளர் பார்வையாளர்களுக்கு இந்தக் கலையின் பெயரை 'பர தன டியம்' என்று சொல்லிக்கொடுக்க ஜனம் அதை ரிப்பீட் செஞ்சது. சுக்குமி ளகுதி ப்பிலி !!!!! லாடின் அமெரிக்கா, நடனம் சொல்லிக்கொடுக்கும் பள்ளிப்பிள்ளைகள் கோ ரைட் கோ லெஃப்ட்ன்னு ஸ்டெப்ஸ் போட்டுக் காமிச்சாங்க. பெரியவர்கள் மூணு ஜோடி ஸம்பா, ச்ச ச்ச ச்ச ஆடுனாங்க.
சமோவா குழு

சீனப்பிள்ளைகள் மார்ஷியல் ஆர்ட் செஞ்சு காமிச்சாங்க. பிள்ளைகளின் தந்தை இங்கே இந்தக் கலையைச் சொல்லிக்கொடுக்கும் பள்ளி நடத்தறார். பள்ளி பள்ளின்னா ரெகுலர் பள்ளிக்கூடம் இல்லை. வார இறுதிகளில் வகுப்பு நடத்தித்தான் மக்கள் அவுங்கவுங்க கலைகளை வளர்த்துக்கிட்டு இருக்காங்களாக்கும் கேட்டோ!
கொரியா


கலர்ஃபுல்லா கொரியன் நடனம். நம்ம ஹரே க்ருஷ்ணா பிள்ளைங்க மூவர் (சிஸ்டர்ஸ்) கோபிகைகளும் கிருஷ்ணாவுமா ஆடினாங்க. இந்தப் பிள்ளைகள் இந்த கல்ச்சுரல் விழாவைத் தவறவிட்டதே இல்லை. சீனியர் மோஸ்ட்:-))))

வயிறு கிள்ளுதே...பார்த்தவரை போதுமுன்னு 'சபை'யை விட்டு எழுந்து வந்தோம். இந்தியன் க்ளப் அடையாளமே இல்லை. தோழி இது ஹோலி சீஸனா இருக்கேன்னு மசாலா டப்பாவில் ஏழு கலர்ப்பொடிகளுடன் காத்திருந்தாங்க. நெற்றியில் நாமம் வாங்கிக்கிட்டு இவ்வளவு ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தில் 'இந்தியா காணாமப் போயிருச்சே'ன்ற கவலையுடன் வீட்டுக்குப் போய் சாப்பிட்டோம்.